31.8 C
Chennai
Tuesday, Jul 2, 2024
201611010932290334 nattu marunthu kulambu SECVPF
ஆரோக்கிய உணவு

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நாட்டு மருந்து குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டு வரலாம்.

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு
தேவையான பொருட்கள் :

வெள்ளை கடுகு – 1 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
வரமிளகாய் – தேவையான அளவு
பரங்கி செக்கை – ஒரு நெல்லிக்காய் அளவு
சுக்கு – சிறிதளவு
பூண்டு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளிக்கரைசல் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – சிறிதளவு
வெந்தயத்தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறிது தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து கொள்ளவும்.

* வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

* பின் அதில் கரைத்த புளி கரைசல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிவும் போது சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

* நல்ல சுவையுடன் கூடிய வாய்வு தொல்லைய நீக்கக்கூடிய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.201611010932290334 nattu marunthu kulambu SECVPF

Related posts

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

அவசியம் படிக்கவும் ! அன்றாட உணவில் கருப்பு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

உங்களுக்கு தெரியுமா பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று?

nathan

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்தும்!

nathan

அவசியம் தெரிந்து ககொள்ளுங்கள் சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கட்டாயம் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்!

nathan

கவலை வேண்டாம்! வறட்டு இருமல் நிக்காமல் வருதா?இந்த ஒரே ஒரு பொருள் போதும்

nathan