32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

அதிகம் தூங்கினாலும் ஆபத்து!

தூக்கமின்மை பல நோய்களை வரவழைப்பதைப் போலவே, அதீத தூக்கமும் பல பிரச்னைகளை கொண்டு வரும் என்கிறது ஓர் ஆய்வு. 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது பக்கவாதம் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதாம். அதிக நேரம் தூங்குகிறவர்களுக்கு மற்றவர்களை விட 46 சதவிகிதம் இந்த பாதிப்பு அதிகம் என்றும் சொல்கிறது ஆய்வு.

இதுவரை பக்கவாதம் ஏற்படாத 62 வயதுள்ள 9,692 நபர்களை பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களின் பழக்கவழக்கங்களை அறிந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 346 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த பேரில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் 986 பேர். அவர்களில் 52 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது. இவர்களுக்கு மற்றவர்களை விட இந்த விகிதம் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அளவாக தூங்குகிறவர்களை விடவும் அதிகப்படியாக தூங்குகிறவர்களுக்கு 4 மடங்கு அதிகமாக பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. என்ன காரணம் என ஆய்வு செய்ததில், எப்போதும் போலவே அதீத கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பருமன், உடல் செயல்பாடு குறைவு ஆகியவையே காரணமாக இருந்தது.6 முதல் 8 மணி நேரத் தூக்கமே ஆரோக்கியமானது என்பதையும் அந்த ஆய்வு அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது.

Related posts

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan

உங்களது பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இத படிங்க!

nathan

சமூகத்தில் பெண்கள் மீதான கண்ணோட்டம்

nathan

தினசரி ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வீட்டு மருத்துவம்!!

nathan

ஆய்வில் தெரியவந்த உண்மைகள்! இது மட்டும் நடந்தால் சர்க்கரை நோய் வருவது உறுதி:

nathan

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. நீங்கள் போதுமான நீர் குடிக்காவிட்டால் உண்டாகும் பின்விளைவுகள் தெரியுமா?

nathan