36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இத படிங்க!

பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும்.

இது சீரண மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல் ஆகும். திடக்கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து தண்ணீரையும் உப்பையும் பிரித்தெடுக்கும் வேலையை செய்கின்றது.

அந்தவகையில் பெருங்குடலில் புண் ஏற்பட்டு விட்டால் பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும்.

ஆரம்பத்தில் வயிற்று வலியில் ஆரம்பித்தாலும், நிலைமை மோசமாகும் போது இதன் அறிகுறிகளும் தீவிரமாக காணப்படும்.

மேலும் மலம் கழிக்கும் போது பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். இதனை ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்ய விடின் உயிரையே இழக்கும் அளவில் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது பெருங்குடல் புண் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

 

சாதாரணமாக வயிற்றில் பிரச்சனை இருந்தால், முதலில் வயிற்று வலி தென்படும். அதிலும் பெருங்குடல் புண் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திப்பதோடு, வயிற்றுப் பிடிப்புக்களையும் அனுபவிக்க நேரிடும்.

பெருங்குடல் புண் இருப்பின் மலப்புழையில் கடுமையான வலியை சந்திக்க நேரிடுவதோடு, மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவும் ஏற்படும்.

அவசரமாக மலம் கழிக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் மலம் கழிக்க முடியாது. இம்மாதிரியான நிலையை சந்திக்க நேரிடும்.

பெருங்குடல் புண் இருந்தால், திடீரென்று உங்கள் உடல் எடை குறையும். உடல் எடை எக்காரணமும் இல்லாமல் குறைந்தால் சந்தோஷப்படாமல், மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது பெருங்குடல் புண்ணிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

பெருங்குடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தால், காய்ச்சல் மூலம் அறிகுறியை வெளிப்படுத்தும். அதிலும் காய்ச்சலானது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பெருங்குடல் புண் இருந்தால், வயிற்றுப்போக்கை சந்திப்பதோடு, வயிற்றுப் போக்கின் போது இரத்தமும் வெளியேறும். அதிலும் இந்த வயிற்றுப்போக்கினால் தூக்கத்தை இழக்க நேரிடும். அந்த அளவில் மோசமாக இருக்கும்.

Related posts

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan

ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மார் பகம் சிறிதாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா என்ன?

nathan

ஆஸ்துமாவின் அறிகுறிகளும் அதனை தீர்க்கும் எளிய இயற்கை மருத்துவம்…!!இத படிங்க

nathan

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

nathan

கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!

nathan

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

nathan

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

nathan

விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்

nathan