29.2 C
Chennai
Thursday, Jun 19, 2025
e8
மருத்துவ குறிப்பு

மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!!காய்ச்சிய எண்ணெய்!

காய்ச்சிய எண்ணெய்

தேவையானவை:

நல்லெண்ணெய் – 2 லிட்டர்
பசும்பால் – 200 மில்லி
வெற்றிலை – 3
இஞ்சி – ஒரு துண்டு (தட்டிக்கொள்ளவும்)
ஓமம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – ஒரு டீஸ்பூன் (தட்டிக்கொள்ளவும்)
சீரகம் – ஒரு டீஸ்பூன் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் நல்லெண்ணெயை சேர்த்து சூடுபடுத்தவும். இத்துடன் பசும்பாலையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். வெற்றிலையைக் கிழித்துவைத்துக் கொள்ளவும். எண்ணெயின் சலசலப்பு சத்தம் நின்றவுடன், வெற்றிலைத் துண்டுகள், காய்ந்த மிளகாய், தட்டிய இஞ்சி, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மிளகு, சீரகம், சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி, ஆற விடவும். பிறகு வடிகட்டி சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடிவைக்கவும். 3 மாதம் வரை வெளியில் வைத்து உபயோகிக்கலாம்.

குறிப்பு:

வாரம் ஒரு முறை இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உச்சந்தலையில் தினமும் ஒரு சொட்டு தொட்டுவைத்தால் இருமல், சளித் தொல்லை வராது. எண்ணெயோடு பால் சேர்வதால், முதலில் இரண்டும் ஒட்டாது. பிறகு கொதிக்க வைக்கும்போது இரண்டும் ஒன்றாகும். காய்ச்சும் போது பால் பொங்கி வருவது போல இதில் பொங்காது.

Related posts

சர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா?

nathan

உங்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள் தெரியுமா.!

nathan

கூகுள்ளின் புதிய முயற்சி ஆபத்தில் முடியுமா ? 20 மில்லியன் பாக்டீரியா தொற்றுள்ள கொசுக்களை பரப்பவுள்…

nathan

குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

சர்க்கரை நோயில் இருந்து கால்களை பாதுகாப்போம்

nathan

காய்ச்சலால் அவதியா? இதோ எளிய நிவாரணம் பப்பாளி இலை சாறு போதுமே

nathan