29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

விஞ்ஞான அறிவியலின்படி மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகளுக்கும் மேல். ஆனால் நவீன கால மனிதனின் வாழ்நாள், அவரின் சிந்தனை மற்றும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்நாளில் ‘நேரமின்மை’ என்ற காரணத்தால் பல்வேறு விதமான உணர்வுகளையும், உறவுகளையும் நாம் இழந்து வருகிறோம்.

நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்பை மறந்த அலட்சியப்போக்குதான் இந்த நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது. இதை மாற்றுவதற்கு பெரிய செயலோ, அற்புதமோ நிகழ வேண்டும் என்பதில்லை. நம்மால் செய்ய முடிந்த சின்னச் சின்ன செயல்களே போதும்.

பெற்றோருடன் நேரம் செலவழித்தல், பிடித்த உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுதல், கற்றல் பருவத்துக்குப் பின்பான நண்பர்களுடன் சந்திப்பு, சொந்தங்களின் சுப நிகழ்வில் கலந்துகொள்ளுதல், நமக்கான தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை மீண்டும் செயல்படுத்தினால் உறவுகளையும், மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணர்வுகளையும் மீட்டெடுக்கலாம்.

Source:maalaimalar

Related posts

பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நெல்லிக்காயின் பயன்கள்

nathan

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

அடேங்கப்பா! 7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்பில் என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க

nathan

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

nathan

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா

nathan