28.8 C
Chennai
Sunday, Sep 29, 2024
Curry leaves powder. L styvpf
ஆரோக்கிய உணவு

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

கருவேப்பில்லை இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்குமாம்.

மேலும், தினமும் சாதத்தில் சேர்த்து கொள்ளும் வகையில் பொடியாக தயாரித்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கப்,

மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,

புளி – சிறிது,

பெருங்காயம் – 1 சிட்டிகை,

சிவப்பு மிளகாய் – 7,

உப்பு – தேவைக்கு,

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,

பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில், கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அடுத்து, நன்றாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வெங்காயத்தை அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

nathan

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

சுவையான வேர்க்கடலை பக்கோடா

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்…

nathan

30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!

nathan

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் எப்பவும் பத்திரமா இருக்கும் தெரியுமா!

nathan