24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Curry leaves powder. L styvpf
ஆரோக்கிய உணவு

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

கருவேப்பில்லை இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்குமாம்.

மேலும், தினமும் சாதத்தில் சேர்த்து கொள்ளும் வகையில் பொடியாக தயாரித்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கப்,

மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,

புளி – சிறிது,

பெருங்காயம் – 1 சிட்டிகை,

சிவப்பு மிளகாய் – 7,

உப்பு – தேவைக்கு,

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,

பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில், கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அடுத்து, நன்றாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.

Related posts

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan

சுவையான முருங்கைக்கீரை பொரியல்!! பாலூட்டும் பெண்கள் சாப்பிட..!

nathan

சூப்பர் டிப்ஸ்! தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து..!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

nathan

வேர்கடலை சாட்

nathan

பூண்டை அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பை வலிமைக்கு செய்ய வேண்டியவை…

nathan

சுவையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan