மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கையாக மாதவிடாயை தள்ளிப் போடலாம்! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

மாதவிடாய் என்ற வார்த்தையைச் சொன்னாலே பெண்களே முகம் சுழிக்க ஆர்பித்து விடுகிறார்கள்.

அதற்குக் காரணம் அந்த நாட்களில் அவர்கள் படும் வேதனை அவர்களை அப்படி செய்யத் தூண்டுகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியங்களை அவர்களால் சொல்லி மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. அதிலும் ஏதாவது முக்கிய விசேஷ நாட்களில் மாதவிடாய் வந்துவிட்டால் அவர்களால் கொஞ்சம் கூட மகிழ்ச்சியாக கலந்து கொள்ளவே முடியாது.

அப்படிப்பட்ட நேரங்களில் மாதவிடாயை முன்கூட்டியே அல்லது பின்னால் தள்ளிப் போடவோ வழி கிடைத்தால் மாட்டேன என்றா சொ்லவார்கள்.

அப்படி முன்னாலும் பின்னாலும் தள்ளிப் போட இயற்கையான வழியில் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

உங்க மாதவிடாயை தள்ளிப் போட நினைத்தால் மகப்பேறு மருத்துவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே அணுகி ஆலோசனை செய்யுங்கள்.

உங்க திருமண நாளை ரசிக்க இதை நீங்கள் கொஞ்சம் முன்னதாகவே செய்தாக வேண்டும். ஒரு வாரம் கழித்தோ அல்லது முன்னதாகவே மாதவிடாய் வர்ற மாதிரி திட்டமிடுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை என தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு 15 நாட்கள் குடித்து வாருங்கள். இது உங்களுக்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே மாதவிடாய் வர உதவும்.

பயன்படுத்தும் முறை
1 கிளாஸ் தண்ணீரில் 3-9 கிராம் வரையிலும் மஞ்சள் தூள் போட்டு கலந்து குடியுங்கள்.
மஞ்சள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்காக்குகிறது இது மாதவிடாயை உடனே தூண்டுகிறது என்று டாக்டர். மைக்கேல் டியொரா ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார்.
மாதவிடாயை தள்ளிப் போக
உங்க மாதவிடாயை தள்ளிப் போட நினைத்தால் கொண்டைக்கடலை அல்லது பயறை வறுத்து பொடியாக்கி சூப் போட்டு குடியுங்கள்.

குறிப்பாக துவரம் பருப்பு மற்றும் பாசிப்பயறு போன்ற முழு பயறு மற்றும் பருப்புகளைக் கொண்டு கஞ்சி, சூப் ஆகியவற்றைச் செய்து சாப்பிட்டு வாருங்கள்.

குறிப்பாக துவரம்பருப்பு உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை கொண்டது. எந்த காய்கறி சாப்பிட்டாலும் அதன் கூடவே சேர்த்து சிறிது துவரம்பருப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப் போட துணை செய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button