31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.

மேலும் இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

ஆனால் பலாப்பழத்தை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்களானால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை,

பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரிமான பிரச்சனைகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.

எனவே பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

குடல்வால் அழற்சி எனப்படும் Appendix உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

Related posts

இன்சுலின் சுரப்பை அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடுங்க..!சூப்பர் டிப்ஸ்

nathan

கருப்பை வலுப்பெற தினமும் உணவில் சேர்க்க

nathan

உங்களுக்கு தெரியுமா நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.!!

nathan

வாந்தி, வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும் கிராம்பு

nathan

சுவையான… பீட்ரூட் பொரியல்

nathan

ஆரோக்கியத்தை குறைக்கும் உப்பு

nathan

சர்க்கரை நோய் மற்றும் பெண் மலட்டு தன்மையை போக்கும் நாவல் பழம்

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan