மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது. கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது.
சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.
உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
சர்க்கரை வியாதிக்கு இது பெரிய தீர்வாக அமைகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.
உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.
கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது.
கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன

Related posts
Click to comment