27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
foodsyoushouldneverstoretogether1 1549264854
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

பொதுவாக வீடுகளில் சில உணவுங்களை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதை பல நேரங்களில் மூட நம்பிக்கை என்று நினைத்து கொண்டு செய்யாமலே இருப்போம். ஆனால், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற சில விஷயங்களில் அறிவியல் பார்வையும் உள்ளது என இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.

மனிதன் உயிர் வாழ தேவையானது உணவு தான். ஆனால், இதில் கூட நமக்கு சில பாதிப்புகள் உண்டு என்பதை உருளைக்கிழங்கும் வெங்காயமும் சொல்லி விடுகின்றன. பெரும்பாலும் வீடுகளில் காய்கறிகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற நிலை தான் நமக்கு பாதிப்பை தருகிறது. இந்த பதிவில் வீட்டில் எப்படிப்பட்ட உணவுகளை ஒன்றாக வைத்தால் தீங்குகள் நமக்கு உண்டாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம் எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது. காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.

திராட்சை பழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும். குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.

ஆரஞ்சும் ஆப்பிளும் பல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும். இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூலிகைகள் சில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகை தன்மையை இழக்க செய்து விடும். உதாரணத்திற்கு துளசி, தூதுவளை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நாம் அப்படியே வைப்பது நல்லதல்ல. இதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் கலந்த ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாது.

வெள்ளரிக்காய் வீடுகளில் தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற உணவுகளில் எத்திலீன் என்கிற வாயு உற்பத்தியாகும். ஆதலால், இவை மிக விரைவிலே கெட்டு போய் விடும். அந்த வகையில் வெள்ளரிக்காயும் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைக்காதீர்கள். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.

ஆப்பிள் பெரும்பாலும் ஆப்பிளை தனியான இடத்திலே வைக்க வேண்டும். பூசணி போன்றவற்றை இதன் பக்கத்தில் கூட வைக்க கூடாதாம். ஏனெனில், இவ்வாறு செய்வதால் ஆப்பிள் அதன் தட்பவெப்பத்தை மீறி சீக்கிரமே கெட்டு போய் விடுமாம்.

வெங்காயமும் உருளையும் பொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணிற்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள். ஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.

வேறென்ன வைக்கலாம்..? வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும், எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.

தக்காளி எப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம். இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.

முட்டை முட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

foodsyoushouldneverstoretogether1 1549264854

Source :boldsky

Related posts

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்

nathan

சூப்பர் டிப்ஸ்! வயிற்றில் கொப்புளங்களை குணப்படுத்த உதவும் 5 உணவு பொருட்கள்!

nathan

சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா

nathan

சில பொருட்களை கழுவும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க…! 

nathan

தெரிந்துகொள்வோமா? சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

nathan

தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா!

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan

தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan