28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
31 1501496750 14 1447504809 charcoalfacial
முகப் பராமரிப்பு

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

பொதுவாக விஷேசங்களுக்கும், முக்கியமான இடங்களுக்கும் செல்லும் போது முகம் அழகாகவும், வசீகரமாகவும் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பமும் ஆகும்.
ஃபேசியல் செய்வதால் முகம் பளிச்சென மாறும். பேசியல் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. கெமிக்கல்கள் நிறைந்த பேசியலை செய்வதை காட்டிலும், இயற்கை முறையில் பேசியல் செய்வது நல்ல பலனை தரும்.

வசீகரமான முகத்திற்கு நீங்கள் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி என்பது பற்றி காணலாம்

கிளேன்சிங்
முகத்தை பேசியலுக்கு தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக முதலில் க்ளென்சிங் செய்ய வேண்டும். இதற்கு பாலினை பஞ்சில் தொட்டு முகத்தில் மசாஜ் செய்யலாம். அல்லது நீங்கள் பாதம் எண்ணெய் கொண்டு கூட முகத்திற்கு மசாஜ் செய்து சுத்தமாக துடைத்து விடலாம்.

ஸ்கிரப் முகத்தை நன்றாகவும், இயற்கையான முறையிலும் ஸ்க்ரப் செய்ய சர்க்கரை உதவுகிறது. சிறிதளவு கரும்பு சக்கரையுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்ட வடிவில் 3 – 5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும்.

மசாஜ் முகத்திற்கு மசாஜ் செய்வது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும். வாழைப்பழம் அல்லது பப்பாளிப்பழத்தை அரைத்து அதனை முகத்தில் இட்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆவி பிடித்தல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள், துளைகளில் தங்கிய அழுக்குகள் நீங்கும்.

பேஸ் பேக் 1: முகத்திற்கு பேக் போட நீங்கள் எந்த பழங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக தக்காளியை எடுத்து நன்றாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும்.

பேஸ் பேக் 2: ஆப்பிளை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

பேஸ் பேக் 3: வாழைப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

டோனிங் மற்றும் மாய்சுரைசிங் டோனிங் மற்றும் மாய்சுரைசிங் செய்வதற்காக வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தோ அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்தோ முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

பலன்கள் 1. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குகிறது. 2. விட்டமின்கள் அதிகமாக உள்ளது. 3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 4. சருமத்தை மிருவதுவாகவும், ஈரப்பதமாகவும் பராமரிக்க உதவுகிறது. 5. வயதான தோற்றத்திலிருந்து பாதுகாக்கிறது.

31 1501496750 14 1447504809 charcoalfacial

Related posts

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….சூப்பர் டிப்ஸ்

nathan

சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! வெயியில் இருந்து சருமத்தை காக்க தர்பூசணி ஃபேஸ் பேக்

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan

ரொசாசியாவிற்கான 10 சிறந்த தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

ஃபேஸ் வாஷ்

nathan

முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

nathan