முகப் பராமரிப்பு

இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

உப்தன் ஃபேஸ் பேக்குகள் என்பது பாரம்பரிய அழகு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் ஃபேஸ் பேக்காகும். இந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகள் சரும கருமையைப் போக்கவும், இறந்த செல்களை நீக்கவும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை நீக்கவும் செய்யும்.

இந்த ஃபேஸ் பேக்கை செய்ய நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டால், சருமத்தின் நிறம் மேம்படுவதைக் காணலாம். இங்கு ஓர் அற்புதமான உப்தன் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
பயித்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
வெள்ளை சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
சிவப்பு சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் – 1 சிட்டிகை
ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு மாவு மற்றும் பயித்தம் பருப்பு மாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2 பின் அத்துடன் சந்தனப் பொடிகள் இரண்டையும் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3 பின்பு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் பேக் தயார்.

செய்முறை #4 அடுத்து இந்த ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை #5 இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், சருமம் எப்போதும் பொலிவோடும், பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Related posts

உலகளவில் அழகுப்படுத்திக்க செய்யப்படும் விசித்திர சிகிச்சை முறைகள்!

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

nathan

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமாம்…

nathan

முகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்!….

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

nathan

உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் பழங்கள் என்ன தெரியுமா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan