30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

பாதாம் சூரண்

என்னென்ன தேவை?

தரமான பெரிய பாதாம், சர்க்கரை, பசும் நெய் – தலா 100 கிராம்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
கோதுமை மாவு – 1 டீஸ்பூன்,
விரும்பினால் ஜாதிக்காய்த் தூள் – சிறிது.

எப்படிச் செய்வது?

ஃப்ரெஷ்ஷான பாதாமை வெறும் கடாயில் வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் பவுடராக அரைக்கவும். தவாவில் நெய் விட்டு சூடாக்கியதும் கோதுமை மாவு, பாதாம் தூளை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு அதில் குங்குமப்பூவை போடவும். சர்க்கரை கரைந்து தேன் போல் வந்ததும் அதை பாதாம் கலவையில் கொட்டி கிளறவும். இது சுருண்டு அல்வா பதம் கரண்டியால் எடுக்கிற மாதிரி இருக்க வேண்டும். ஆறியதும் ஸ்டோர் செய்யவும்.

குறிப்பு: மார்வாடி களின் குடும்பத்தில் குறிப்பாக பிரசவித்த பெண்கள், வயது வந்த பெண்களுக்கு கண்டிப்பாக கொடுப்பார்கள். உடம்பிற்கு சத்து கொடுக்கும். குழந்தைக்கு பலம் உண்டாகும்

Related posts

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

சொஜ்ஜி

nathan

ரோஸ் லட்டு

nathan

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

nathan

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

nathan

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan