30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப்,
பால் – அரை லிட்டர்,
திக்கான தேங்காய் பால் – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

* பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

* மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

* பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்பு:

மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது.

பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

Related posts

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு -செய்முறை

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

nathan

ருசியான… செட்டிநாடு சுழியம்

nathan

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

nathan