30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘பிரபஞ்சம் சொல்வது ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் நேற்று வானத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காவி கொடிகளை அசைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர்.

விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் உமாங் மேத்தா கூறுகையில், “ 500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரின் நினைவாக வான்வழி பேனர் ஏற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ”

Related posts

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

nathan

நடிகை மடோனா செபாஸ்டியன் போட்டோஷூட்

nathan

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

இம்மாதம் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? -மிதுனத்தில் பயணிக்கும் குரு

nathan

மனைவியுடன் உல்லாசம்.. கடுப்பான கணவர்.. இறுதி நடந்த பயங்கரம்..!

nathan

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எத்தனை ஆயிரம் ஏலத்தில் விற்கப்பட்டது தெரியுமா?

nathan

இந்தியாவின் காஷ்மீரில் விழுந்து நொருங்கியது போர் விமானம்

nathan

ஐஐடியில் படித்துவிட்டு மாடு விற்கும் தோழிகள்

nathan

100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்

nathan