Other News

ராப் பாடகர் விளக்கம் – மிருணாள் தாக்குருடன் காதலா?

‘சீதா ராம’ படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். தற்போது தெலுங்கில் நானியுடன் ‘ஹைனானா’ படத்திலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘பேமிலி ஸ்டார்’ படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மிருணாள் தாக்கூர், தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் வைரலானது. அவர் அதை மறுத்தார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] தற்போது அவர் பிரபல இந்தி ராப் பாடகரும் பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக் சிங்குடன் டேட்டிங் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி விருந்தில் இருவரும் கைகோர்த்து நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இருவருக்கும் இடையே நட்பை தாண்டிய உறவு இருப்பதாக மும்பையில் செய்தி பரவியது.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள பாட்ஷா, “இணைய நண்பர்களே, உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button