உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கையில் காயம் ஏற்பட்டு சனிக்கிழமை விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி ஆட்டமும், அதனைத் தொடர்ந்து 10ஆம் திகதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்றும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவதால் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது ரோகித் சர்மா பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், காயம் தீவிரமில்லாதது என்றும், சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுத்த பிறகு ரோஹித் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், அரையிறுதியில் அவரது செயல்திறனைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
Chilled out guys
captain is fine and batting now. In fact now hitting better now. #RohitSharma #crickettwitter pic.twitter.com/YgHIvhYltU
— Vimal कुमार (@Vimalwa) November 8, 2022