மருத்துவ குறிப்பு

தீர்க்க முடியாத நோய்களை விரட்டியடிக்க நாட்டு மருந்து

பதிமுகம்  என்பது ஒரு வகை சாயமரம்மரமாகும். பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். “ஜாக்லோன்” என்ற வேதிப்பொருள் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

தகசமணி, தகமுக்தி, பதிம் கம் போன்ற பல்வேறு பெயர்கள் பொதுவாக தேசிய மருந்தகங்களில் கிடைக்கின்றன.

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க, சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்ய, மூல நோய் வராமல் தடுக்க, மூட்டு வலி, புண்களை குணப்படுத்த, சருமத்தை இளமையாக வைத்திருக்க, வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய 1 டம்ளர் தண்ணீர் போதுமானது.

இந்த தண்ணீரை கேரளாவில் மக்கள் பல ஆண்டுகளாக குடித்து வருகின்றனர். இந்தப் பதிவின் மூலம் நம்மில் பலருக்குத் தெரியாத பதிம்காம் தண்ணீரை எப்படித் தயாரித்து அருந்தலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த நீரை அதிகம் குடிக்கலாம். பதிம்காம் என்பது மரத்திலிருந்து எடுக்கக்கூடிய பட்டை.

இந்த பட்டை மலிவானது மற்றும் தேசிய மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வையுங்கள்.

 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் பதிமுகம் பட்டை – 1/4 கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும். இதோடு சிறிய துண்டு – சுக்கு, ஏலக்காய் – 1, வர மல்லி – 1 கரண்டி, இந்த மூன்று பொருட்களையும் நசுக்கி பொடி செய்து போட்டுக் கொள்ள வேண்டும்.

எல்லா பொருட்களும் தண்ணீரில் 5 லிருந்து 8 நிமிடம் நன்றாக கொதிக்கும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஆற வைக்க வேண்டும்.

அதன் பின்பு வடிகட்டி 1 டம்ளர் அளவு தண்ணீரை தாராளமாக ஒருவர் பருகலாம். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பதிமுக சத்து நிறைந்த தண்ணீரை நான்கிலிருந்து ஐந்து பேர் தாராளமாக குடிக்க முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த தண்ணீரை குடிக்கலாம். எப்போது வேண்டுமென்றாலும் இந்த தண்ணீரை குடிக்கலாம். முடிந்தவரை காலையில் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெகுநாட்களாக இந்த தண்ணீரை கேரள மக்கள் பருகிக்கொண்டு வருகிறார்கள். ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்ற எந்த பயமும் தேவை இருக்காது. ஆனால் கட்டாயமாக கர்ப்பிணி பெண்கள் இந்த தண்ணீரை குடிக்கக் கூடாது. இந்த தண்ணீர் பார்ப்பதற்கு ரோஸ் கலரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய வியாதிகளிடமிருந்து நம்முடைய உடம்பை பாதுகாத்துக் கொள்ள நமக்கு தெரியாத இப்படிப்பட்ட நிறைய விடயங்கள் உள்ளது.

தொடர்ந்து இப்படிப்பட்ட இயற்கையான விஷயங்களை பின்பற்றி வரும் போது நம்முடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்டில் முயற்சிசெய்து பாருங்க.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button