28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
fateline 1647679027
ஆரோக்கியம் குறிப்புகள்

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கைரேகையைக் கொண்டு அவரின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும். நமது கையில் பல வகையான ரேகைகள் மற்றும் மேடுகள் உள்ளன. ஒவ்வொரு ரேகையும் ஒருவரின் வாழ்க்கைப் பற்றி கூறுகின்றன. அந்த வகையில் கைரேகையில் சனி ரேகை மற்றும் சனி மேடுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சனி ரேகை அனைவரது கைகளிலும் இருந்துவிடாது. அப்படியே அந்த சனி ரேகை இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ரேகை ஒருவரின் நிதி நிலை, அடையாளம், வெற்றி போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சனி ரேகையை விதி ரேகை என்றும் அழைப்பார்கள். பொதுவாக இந்த ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி, நடுவிரலின் கீழ் பகுதியான சனி மேட்டை அடையும். சரி, இப்போது இந்த சனி ரேகையைப் பற்றி சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.

சனி ரேகை

கைகளில் திருமண ரேகை, நிதி ரேகை, வாழ்க்கை ரேகை, இதய ரேகை போன்றவை இருப்பது போல, சனி ரேகையும் இருக்கும். ஆனால் கைரேகை ஜோதிடத்தின் படி, இந்த சனி ரேகை அதிர்ஷ்டசாலிகள் கையில் தான் இருக்கும். இந்த வகை ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி சனி மேடான நடுவிரலின் கீழ் பகுதி வரை செல்லும். சனி மேடு என்பது நடுவிரலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

இளம் வயதில் பணக்காரராக்கும் சனி ரேகை

எவருடைய கையில் சனி ரேகை மணிக்கட்டின் மேல் பகுதியில் தொடங்கி சனி மேடு வரை செல்கிறதோ, அத்தகையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் சிறு வயதிலேயே நல்ல வங்கி இருப்புடன் இருப்பார்கள். அதோடு இளம் வயதிலேயே நிறைய பணம் சம்பாதித்து தங்கள் உழைப்பினால் நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.

சனி ரேகை முறியக்கூடாது

கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவருடைய கையில் சனி ரேகை ஆயுள் ரேகையை விட்டு சனி மேட்டிற்கு சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்டுகிறது. இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். குறிப்பாக சனி மேடு செல்லும் சனி ரேகையில் முறிவு இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது முழு பலனையும் தராது.

நிறைய பணம் சம்பாதிப்பார்கள்

ஒருவருடைய கையில் குரு மேட்டில் இருந்து சனி மேட்டிற்கு ஒரு ரேகை சென்றால், அத்தகையவர்களும் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். மேலும் இவர்கள் நல்ல வசதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள். முக்கியமாக இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Related posts

வறுமையை உண்டாக்கும் “இந்த” பழக்கங்களை இப்போதே விட்டொழியுங்கள்.

nathan

புற்றுநோய் வராமல் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களை கடைப்பிடிங்க!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்.

nathan

வயிற்று பிரச்சினைகள் தீர சூடான தண்ணீர்!…

nathan

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

nathan

விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் கொரோனா ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது,

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

nathan

உயிரணுக்கள் கிடுகிடுவென அதிகரிக்க கரும்பு சாறு!…

nathan