உங்களுக்கு அடிக்கடி இருமல் வருதா?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!
இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த அதிமதுர தேங்காய் பாலை குடித்து வந்தால் இருமலுக்கு குட்பை சொல்லலாம். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
அதிமதுரம்
தேங்காய்ப் பால்
சுக்குபொடி
வெல்லம்
ஏலக்காய் தூள்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
செய்முறை:-
முதலில் அதிமதுரத்தை தூளாக்கி அதை நீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அதிமதுரத்தை அரைத்து ஒரு டம்ளர் அள்விற்கு அதனை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பின்னர், அந்த சாறை வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும்.
தேங்காய் பால் கொதித்த பிறகு அதில் சுக்கு பொடி, வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்து ஆறியவுடன் பருகலாம். இதனை பருகுவதன் மூலம் இருமல், சளியிலிருந்து முழுவதுமாக குணமடையலாம்.