25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
22 61dd820185487
ஆரோக்கிய உணவு

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

பல வகையான மாவுகளை மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், முக்கியமாக கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.

மேலும், மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.

முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும்.

அப்படி, மாவை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

முதலில், மாவை காற்று புகாத பாத்திரங்களில் மாவை அறைகளில் வைக்கலாம்.

இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும்.

மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.

பின்னர், அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாமல் தடுக்கின்றனர்.

மேலும், பூச்சிகளை தடுக்க பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது.

மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம். அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம்.

Related posts

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

nathan

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து -தெரிஞ்சிக்கங்க…

nathan

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

இரவில் தூங்கும் முன் இதை ஒரு டம்ளர் குடித்தால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan

சுவையான கருப்பு சுண்டல் ரெசிபி

nathan

அவசியம் படிக்க..முன்னோர்கள் உணவு vs தற்கால உணவு முறை !

nathan

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்

nathan

தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா?தெரிஞ்சிக்கங்க…

nathan