21 619cba
அழகு குறிப்புகள்

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர்.

18 வயதான யுவதி இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த யுவதி திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியதுடன் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இப்பாதக செயலை செய்ய முயன்ற இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்ய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு இருந்ததுடன் , அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related posts

உங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்

nathan

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

சரும சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தரும் பழம்

nathan

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

nathan

முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்க…

nathan

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்!…

sangika

அழகான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தண்ணீரை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்!

nathan

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan