அழகு குறிப்புகள்

புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!இனி இதுக்கெல்லாம் நோ…

நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இனி அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு புது நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா
திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இனி இதுக்கெல்லாம் நோ… புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!

பின்னர் இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்த போது நயன்தாரா செருப்பு அணிந்து வந்தது சர்ச்சையானது. ஏழுமலையான கோயில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர் உள்ளிட்ட இடங்களில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நயன்தாரா செருப்புடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புது நிபந்தனை
இதையடுத்து இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் தங்கள் சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவுல்லாவுக்கு சென்றுள்ளனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இனி இதுக்கெல்லாம் நோ… புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!

அங்கு கோவில் சார்பாக மரியாதையையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு படங்களில் நடிப்பது தொடர்பாக நயன்தாரா புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவிடுவதற்காக, படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனது வேலையை மீண்டும் தொடங்கிய பிறகு,

நயன்தாரா தனது சக நடிகர்களுடன் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முக்கிய முடிவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button