27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 61399
மருத்துவ குறிப்பு

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

மங்கயைரை வருத்தும் மாத பிரச்சினை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில்உள்ள வி.ஜி.கே. மருத்துவமனை பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஜெ.அனுஜா கூறியதாவது:-

இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதமாதம் வருவதில்லை. அதிக போக்கு பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் தைராய்டு, ரத்தசோகை, கருப்பை, நீர்க்கட்டி, என்டோ மேட்ரியோசிஸ் ஆகும்.

இதில் பல பெண்கள் நீர் கட்டி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 60 சதவிகித பெண்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 18 முதல் 45 வயது உள்ள இனப்பெருக்க பிரிவை சார்ந்த பெண்களிடையே பெண் சினைப்பை நோய்குறி கோளாறு ஏற்படுகிறது. சினைப்பை நோய்குறி (நீர்க்கட்டி) என்பது சினைப்பையில் இருக்கும் முட்டைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் சினைப்பையை சுற்றி நீர் கொப்புளங்கள் போல உருவாகும் நிலையை குறிக்கும்.

இதனை விளக்கமாக கூறுகையில், ஒவ்வொரு சினைப்பையில் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து தன்னை உடைத்து கொண்டு வெளி வரும்போதுதான் விந்துகளோடு இணையும். மீதம் இருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற மாதவிடாய் சுழற்சி ஆகும்.

ஆனால் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் (நீர்க்கட்டி). இதில் என்ன நடக்கும் என்றால் கரு முட்டைகள் ஒன்று கூட முழு வளர்ச்சி அடைந்து உடைந்து வெளிவருவதில்லை. அந்த முட்டைகள் அழிவதும் இல்லை. அவற்றை சுற்றி சேர்ந்து கொண்டு நீர் கொப்புளங்களாக முட்டைபையை சுற்றி ஆக்கிரமித்து கொள்கின்றன.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக வளர்ந்து இருந்தல், எடை அதிகரிப்பு, முடிஉதிர்தல், முகப்பரு, என்னை வடியும் முகம், இந்த நோயின் விளைவாக குழந்தையின்மை, இதயநோய், நீரழிவு நோய், உயர் கொழுப்பு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோயில் இருந்து விடைபெற நாம் சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம், சரியான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயில் இருந்து விடுபட ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy: MalaiMalar

Related posts

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க. : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…!

nathan

ஆலிவ் எண்ணெயின் இரட்டை நன்மைகள்!! அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும்…

nathan

அவசியம் படிக்க.. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் கசாயம்

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan

அவள் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்!

nathan

தினசரி ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வீட்டு மருத்துவம்!!

nathan

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்தா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

nathan

உங்களுக்கு தெரியுமா பற்கள் வெண்மையாக பளிச்சிட இவை மட்டும் போதும்…

nathan