28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
cover 1 2
ஆரோக்கிய உணவு

சுடு தண்ணீரில் 2 கிராம்பு போட்டு குடிங்க! சளி, இருமலுக்கு உகந்த மருந்து..

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது.

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது.

மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம்.

கிராம்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது பரவிவரும் தொற்றில் இருந்து நம்மைக் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

குறிப்பாக கல்லீரலை பாதிக்கக்கூடிய தொற்றிலிருந்து காக்கின்றது. காலையில் இரண்டு கிராம்புகளை லேசான சுடுநீரில் போட்டு குடித்தால் வயிறு மிகவும் சுத்தமாக இருக்கும்.

அடிக்கடி சளி காய்ச்சல் உள்ளவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும். கிராம்பு பல ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால் கிராம்புகளின் பயன்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கிராம்பு சாப்பிடுவது நம்மை அலர்ஜி பிரச்சினையில் இருந்து விடுபட செய்யும். இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது. தொண்டை மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்த இது உதவுகிறது.

Related posts

சூப்பரான பலாக்காய் கிரேவி

nathan

சுவையான கருப்புக்கவுனி அரிசி களி

nathan

இளநீர் எனும் இயற்கைக் கொடை

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan

சர்க்கரைக்கு பதிலாக இதை தினமும் பயன்படுத்தி பாருங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

nathan

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

nathan

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி:அற்புதமான எளிய தீர்வு

nathan

இந்த அற்புத பானம்! ஒரே மாதத்தில் அடிவயிற்று கொழுப்பை கரைக்க வேண்டுமா?

nathan