Curry leaves powder. L styvpf
ஆரோக்கிய உணவு

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

கருவேப்பில்லை இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்குமாம்.

மேலும், தினமும் சாதத்தில் சேர்த்து கொள்ளும் வகையில் பொடியாக தயாரித்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கப்,

மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,

புளி – சிறிது,

பெருங்காயம் – 1 சிட்டிகை,

சிவப்பு மிளகாய் – 7,

உப்பு – தேவைக்கு,

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,

பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில், கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அடுத்து, நன்றாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.

Related posts

காளானை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது!..

nathan

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தலைசுற்றலை நீக்கும் ஏலக்காய்…!!!!எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

nathan

வெறும் வயிற்றில் ஊறவைத்த வேர்க்கடலை! இவ்வளவு ஆபத்தும் இருக்கின்றதா?

nathan

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

sangika

உங்களுக்கு வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

nathan