சிற்றுண்டி வகைகள்

எள்ளு கடக் பூரி

தேவையானபொருள்கள்
மைதா மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
சூடாக்கிய வெண்ணெய் அல்லது நெய் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
கருப்பு, வெள்ளை எள் (இரண்டும் கலந்தது) – 1/2 கப்,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை
மைதாவை வாய் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு, உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, உப்புப் போட்டு பிரெட் தூள் மாதிரி கலக்கவும். கையில் பிடித்தால் உதிராமல் கொழுக்கட்டை மாதிரி சிறிது நேரம் உடையாமலும் இருக்க வேண்டும். இதுதான் பதம். அதை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து, பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை பூரியாகத் தேய்த்து அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தடவி, மைதா 1 டீஸ்பூன் தூவி, உருட்டி பூரிகளாகத் தேய்க்கவும். அது ஈரமாக இருக்கும் போதே கருப்பு, வெள்ளை எள் கலந்து, எள் கலவையை 1/2 டீஸ்பூன் அளவாக பூரியில் வைக்க வேண்டும். சிறிது அழுத்தி ஒட்ட வேண்டும். கடாயில் எண்ணெய் சூடாக்கி இந்த எள்ளு பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து, வடித்து வைத்துக் கொள்ளவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

இப்போது சுவையான எள்ளு கடக் பூரி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Related posts

சுவையான மசாலா பொரி

nathan

தீபாவளி ஸ்பெஷல்: ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்!

nathan

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

இனி வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி…!

nathan

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவு கிடைக்கும். இன்று மாங்காய் வைத்து அனைவருக்கும் விருப்பமான சூப்பரான ப…

nathan

கறிவேப்பிலை இட்லி

nathan

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan

பேபி கார்ன் புலாவ்

nathan