சைவம்

சோயா உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?

சோயா உருண்டைகள் முக்கால் கப்,
வெங்காயம் 1,
தக்காளி 3,
இஞ்சி -பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
வறுத்துப்பொடித்த சீரகம் 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு,
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன்,
சோம்பு ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள், உப்பு தேவையானஅளவு.

எப்படி செய்வது?

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம் ) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
Paruppu Urundai Kulambu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button