29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுத லைப் புலி கள் இரங்கல்!

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை:

இசையாலும் அன்புள்ளத்தாலும் அனைவரையும் கட்டி வைத்திருந்த மாபெரும் இன்னிசைக்குயில் தன் மூச்சை நிறுத்தியுள்ளது. எமது விடுதலைப் போராட்டத்தின் மிக இறுக்கம் நிறைந்த காலத்தில் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதிலும் அதை மக்கள் மனதில் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் எழுச்சிப் பாடல்கள் பெரும் பங்காற்றியிருந்தன.

 

அச்சுறுத்தல்கள் நிறைந்த அன்றைய காலத்திலும் தமிழகத்தில் இருந்து தனது தேமதுரக் குரலால் விடுதலைப் பாடல்கள் பலவற்றைப்பாடி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்ததோடு தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையான இடத்தைப் பிடித்திருந்தார். அவர் இன்று எம்மோடு இல்லையென்றாலும் இசையுலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட மாபெரும் கலைஞனின் பாடல்கள் எப்போதும் அவரின் குரலைச் சுமந்து கொண்டேயிருக்கும்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

என் வாழ்க்கையை முடிக்க போறேன்: பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி

nathan

சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

nathan

நயன்,விக்கி இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

சனி பெயர்ச்சி பலன்.. எதிரிகள் தொல்லை இனி இல்லை..

nathan

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் தெரிஞ்சிக்கங்க…

nathan

மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்..

nathan

ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன்

nathan

மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி…

nathan