23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dgtrt
ஆரோக்கியம் குறிப்புகள்

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

பிறந்து புதிதாக உலகிற்கு வரும் உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சற்று வித்யாசமானவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் பிறந்து படிப்படியாக மட்டுமே வளர்ச்சியை காணும் மனித குழந்தைகளுக்கு முதல் உணவான பாலை குடிப்பதற்கும் தாய் தான்கற்றுத் தர வேண்டியுள்ளது. பிறந்த குழந்தையின் உரிமையாக இருக்கக் கூடியது தாய்ப்பாலைபுகட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாயின் கவனக்குறைவு குழந்தையின் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடும்.

கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு குழந்தை தனக்கு பசிக்கிறது என்பதை பிறருக்கு உணர்த்தும் வகையில் சைகைகளின் மூலமோ அல்லதுஅரைகுறை வார்த்தைகளின் மூலமோ உணர்த்தி விடும். ஆனால் தாயின் வயிற்றில் நீண்ட நேரம் தூக்கத்தில் இருந்தபடி வளர்ந்த குழந்தை பிறந்தவுடன் தனது பசியை எவ்வாறு உணர்த்தும். இத்தகைய சூழலில் குழந்தை அழுதால் பால் கொடுக்கலாம் என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

பொதுவாக குழந்தை பிறந்த 1மணி நேரத்திற்குள் தாயிடம் சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த முதல் பாலைகட்டாயம் கொடுக்க வேண்டும்.
dgtrt
குழந்தைக்குஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முதல் 12 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில குழந்தைகளுக்கு 3லிருந்து 4 முறை பால் அருந்தினாலே போதுமானதாக இருக்கும். வலுகட்டாயமாக குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது. குழந்தையின் பசியைஅறிந்து பால் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரம், இத்தனை முறை, இந்த அளவு என வரைமுறைகளை கொண்டு பட்டியலிட்டு குழந்தைக்கு பாலுட்டிட கூடாது.

பால் கொடும் முறையில் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த விஷயம் எந்த நிலையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பது தான். சில தாய்மார்கள் பால் கொடுக்க ஏதுவாக இருக்கிறது என எண்ணிய அல்லது தனக்கு சிறுது நேரம், ஒய்வு தேவை என கருதி படுத்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுப்பதுண்டு. அவ்வாறு படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது குழந்தையும், தாயும் உறங்க கூடும்.

இதனால் எதிர்பாராத விதமாக தாய்ப்பால் குழந்தையின் மூச்சு குழாய்க்குள் இறங்கி குழந்தையின் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்ப்படுத்தக் கூடும். அதோடு படுத்துக்கொண்டு பால் குடிப்பதால் குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியும் ஏற்படும். ஆகையால் எப்போதும் அமர்ந்த நிலையில் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்தில் குழந்தை தூங்குவதாக உணர்ந்தால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி படுக்க வைக்க வேண்டும்.

குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்ய வேண்டும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியால், நன்றாக துடைத்துவிட வேண்டும். அதோடு மிகுந்த வாசனை கொண்ட சோப்புகளை பயன்படுத்து மார்பகங்களை சுத்தம் செய்யக் கூடாது.

Related posts

காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?

nathan

ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ராசிக்காரர்கள் எளிதில் கள்ள உறவில் ஈடுபடுவார்களாம்.. உங்க கணவன் அல்லது மனைவி ராசி இதுல இருக்கா?

nathan

பச்சை நிற உடையில் ரம்யா பாண்டியன்!நீங்களே பாருங்க.!

nathan

பெண் குழந்தை இருந்தா? நீங்க இதெல்லாம் செஞ்சே ஆகணும்!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்… இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்…!!

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!தெரிந்துகொள்வோமா?

nathan