29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

கட்டாயம் படிக்கவும்! உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் மறைந்து தாக்கும் புற்றுநோய்கள!

ஒருவரது உடலில் என்ன நோய் உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும். ஆனால் சில நோய்களை அதை இறுதி நிலையில் தான் கண்டறிய முடிகிறது.

அந்த வகையில் உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் மறைந்திருந்து தாக்கும் புற்றுநோய்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

மூளை புற்றுநோய்

மூளை மற்றும் தண்டு வடத்தில் புற்றுநோய் செல்கள் உருவாகினால் மூளை புற்றுநோய் உருவாகும்.

மேலும் அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி போன்றவை காணப்பட்டால் அவை மூளை புற்றுநோயின் அறிகுறியாகும்.

கணைய புற்றுநோய்

கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும். கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும்.
கல்லீரல் புற்றுநோய்

கல்லிரல் புற்றுநோய் முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுக்க பரவும்.மேலும் கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும்.

சார்க்கோமா

இது குறிப்பாக தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய். மேலும் இவை கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் ஊடுருவி இருக்கும்.
கருப்பை புற்றுநோய்

ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம். இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.

நுரையீரல் புற்றுநோய்

ஆரம்ப நிலையில் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.
சிறுநீரக புற்றுநோய்

ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை. ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும்.

விறைப்பை புற்றுநோய்

இவை பெரும்பாலும் 20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்க விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். எனவே இதனை முதல் நிலையில் அறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும்.
ப்ரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இதுவும் ஒன்று. மேலும் விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.

Related posts

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்

nathan

பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்பு

nathan

சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா?

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்!!!

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

இதோ எளிய நிவாரணம்! நீராவி பிடிப்பதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்க முடியுமா…?

nathan

உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan