29.6 C
Chennai
Sunday, Jul 13, 2025
p46a
அழகு குறிப்புகள்

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்தர்களின் வாக்கு. இதில்,மிளகு, வால் மிளகு’ என இரு வகைகள் உள்ளன. நம் அன்றாடச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.

*திரிகடுகு சூரணத்தில் சுக்கு, திப்பிலியுடன் மிளகு சேர்க்கப்படும். இது நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும்.

*பசும்பாலுடன் 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து குடித்தால் நெஞ்சுச்சளி விலகும்.

p46a

*மிளகைப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் நிற்கும். 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்தால் கோழைக்கட்டு நீங்கும்.

*10 மிளகை எண்ணெய் ஊற்றாத வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். சூடு ஆறியதும், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அதைக் காலை, மாலை, இரவு என அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

*சுக்குடன் மிளகு சேர்த்துப் பொடியாக்கி, கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

*பல்வலி, ஈறுவலி, சொத்தைப்பல் உள்ளிட்ட பல் நோய்களுக்கு மிளகுடன் கல் உப்பு சேர்த்துப் பொடியாக்கி, பல் துலக்கினால் நிவாரணம் கிடைக்கும்.

*ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து முகப் பருக்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் அவை உலர்ந்து உதிர்ந்துவிடும்.

Related posts

இட்சத்தில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம் : இன்ப அதிர்ச்சியில் பெற்றோர்!!

nathan

கற்றாளையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி… எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

nathan

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

sangika

லாஸ்லியா குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய மீரா ! தனது ஸ்டைலை கோப்பி செய்கிறராம் லாஸ்லியா!

nathan

அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்..

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

அப்போ இதை செய்யுங்கோ..!!அக்குளில் கருமை நிறம் மாற ..

nathan

உங்களுக்கு தெரியுமா திருமணத்தின் போது மருதாணி வைப்பதில் இவ்வளவு இரகசியம் உள்ளதா?

nathan