29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

இந்த 10 அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க!பெண்களே அவசியம் படிக்க..!

பெண்கள் பொதுவாக தங்களுக்கு உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

இப்படி சாதாரணமாக பெண்கள் எடுத்துக்கொள்ளும் அறிகுறிகளினால் ஏற்படும் நோய்கள் என்ன என்று பார்க்கலாம்.

அதிகமான இரத்தப்போக்கு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். இப்படி அடிக்கடி அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் ஒருவேளை கட்டியாக இருக்கலாம், மேலும் இது 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம்.

மார்பில் இரத்தம் வடிதல்

வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒருவருக்கு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி.

கடுமையான தலைவலி

பெண்களுக்கு தொடர்ந்து உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.

மலம் கழிக்கும் போது இரத்தம்

மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சு வலி

எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

உடல் எடை குறைவு

எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.

மச்சம்

மச்சம் திடீரென பெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

தாங்கமுடியாத வலி

 

மார்பு, வயிறு, இடுப்பு போன்ற இடங்களில் கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிவயிறு வலி

மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல்சோர்வுபோன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

வெள்ளைப் படுதல்

சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வலியுடன் வெளிப்பட்டு வெள்ளைப் படிதல் உண்டாகும். மேலும் இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இருக்கலாம்.

Related posts

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான காரணங்கள்

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

nathan

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

nathan

இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

கர்ப்பிணிகள் இந்த வேலைகளை செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

nathan

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் !பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan