30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பேரீச்சம்பழ பேஸ்பேக்

நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை, கால் பகுதி கருமையடைந்து விடுகிறது.

இதற்கு என்னதான் ரசாயனங்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினாலும் அவை தாற்காலிகமாக மட்டுமே மாற்றத்தைத் தருகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளும் பராமரிப்பு தான் நிரந்தரத் தீர்வைத் தரும்.

தேவையான பொருட்கள்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 5
உலர்ந்த திராட்சை பழம் – 13
பப்பாளி பழக்கூழ் – அரை டீஸ்பூன்

இவை இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்கு மை போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பின்பு இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டு, 30 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேஸ் பேக்கை வாரம் 3 முறை போட்டு வரலாம். இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சருமம் பொலிவடைவதை காணலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது?

nathan

முக பராமரிப்பு கட்டாயமான ஒன்று வேலைப்பழுவால் கவனிக்காது விடுகிறீர்களா? இத படியுங்கள்!..

sangika

உங்களுக்கு தெரியுமா அழகு பராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்…!!

nathan

குளிர்காலத்தில் சரும வறட்சியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களுக்கு மட்டும், கொழுப்பு குறைக்க

nathan

‘இந்த’ 5 சரும தயாரிப்பு கலவைகள் உங்க சருமத்தை ஜொலிக்க வைக்குமாம் தெரியுமா?

nathan

அரிசி கழுவிய நீரானது அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது.

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

உங்களுக்கு பொலிவான தோற்றத்தைத் தரும் ‘தக்காளி ஃபேஸ் பேக்’

nathan