சூப் வகைகள்

பசியை தூண்டும் மூலிகை சூப்

பசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.

பசியை தூண்டும் மூலிகை சூப்
தேவையான பொருட்கள் :

மிளகு – 20 கிராம்,
சீரகம் – 20 கிராம்,
கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம்,
ஓமம் – 20 கிராம்,
துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி,
உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி,
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

* அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியது இறக்கி பருகவும்.

* சூப்பரான மூலிகை சூப் தயார்.

* இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும். அஜீரண பிரச்சனை தீரும்.

* இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

Related posts

உங்கள் அன்றாட உணவில் ரசம் சேர்ப்பதன் அற்புதமான விளைவு! பல நோய்களைத் தடுக்க முடியுமா?

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

சத்தான கேரட் இஞ்சி சூப் செய்முறை விளக்கம்

nathan

சுவையான மீன் சூப்

nathan

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan

ஆவகாடோ ஸ்வீட் கார்ன் சூப்

nathan

தேங்காய் பால் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan