ht444900
மருத்துவ குறிப்பு

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

செய்திகள் வாசிப்பது டாக்டர்

குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.Cold ablation என்ற பெயர் கொண்ட இந்த கருவி செயல்படும் விதம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.’ஒருவருக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால்தான் மூச்சுக்காற்று அடைப்பு ஏற்பட்டு அவர்களது வாய் வழியாக சப்தம் வெளியேறுகிறது. இதையே குறட்டை என்கிறோம். இதுபோன்ற குறட்டையில் வெளியேறும் சப்தத்தின் அளவு 5 புள்ளி முதல் 10 புள்ளி வரை இருக்கலாம்.

இந்த அளவுக்கு மேல் சென்றால், அது சிக்கலானது. இதுபோல் அளவுகடந்த குறட்டையினால் தூக்கம் மட்டும் கெடுவதில்லை. ரத்த அழுத்தம் அதிகமாவது, சர்க்கரை நோய் ஏற்படுவது, மாரடைப்பு தாக்கும் அபாயம் போன்றவையும் ஏற்படுகிறது.அதனால் குறட்டையை சாதாரண பிரச்னையாக நினைக்காமல் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்’ என்று விளக்கமளித்த மருத்துவர்கள், இந்த கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதன்மூலம் குறட்டைவிடுவது சில நோயாளிகளுக்கு நின்றுபோனதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ht444900

Related posts

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan

கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!! ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம் –

nathan

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

nathan

தெரிஞ்சிக்கங்க…யாருக்கெல்லாம் டைப்-2 சர்க்கரை நோய் வரும் எனத் தெரியுமா?

nathan

சோயா மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா?அப்ப இத படிங்க!

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

மாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா?.. பக்க விளைவுகள் ஏற்படும்..!

nathan