27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201701301425320641 Tulsi water cure all sorts of diseases SECVPF
ஆரோக்கிய உணவு

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்

வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்
துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது.

இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீ போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.201701301425320641 Tulsi water cure all sorts of diseases SECVPF

Related posts

தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

ஜாக்கிரதை! எடை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத கவனத்துல வச்சிக்குங்க…

nathan

ஆயுர்வேதத்தின் படி உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

nathan

சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

nathan

சூப்பரான பசலைக்கீரை பாஸ்தா ரெசிபி

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan