30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

ஆண் பெண் மூளை வித்தியாசம்

மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஆண் பெண் மூளை வித்தியாசம்
உலகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும் உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் ஆணால் விவரித்து, கொஞ்சம் ‘வளவள’வென்று இழுத்து கூற முடிவதில்லை. தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் ஆணால் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை.

அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சியடைகிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குணவேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப்பற்றி சரியான புரிதல் இருபாலருக்கும் இல்லாததாலே காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மணவாழ்க்கையிலும் காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

Related posts

அதிகாலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்!!!

nathan

கணவரிடம் அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை மனைவி உணர்த்தும் அறிகுறிகள்

nathan

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

nathan

உன்னை அறிந்தால் நீதான் கில்லி!

nathan

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

nathan

தைராய்டு பாதிப்பை அஜாக்கிரதையாய் எடுத்துக்காதீங்க! அதன் அறிகுறிகளும் , தீர்வும் !!

nathan

தீர்க்க முடியாத நோய்களை விரட்டியடிக்க நாட்டு மருந்து

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது சின்னம்மை வந்தால் ஏற்படும் ஆபத்துக்கள்!!!

nathan