201610071250556289 Navratri Special cowpea carrots sundal SECVPF
​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி – கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

karamani sundal

தேவையான பொருட்கள் :

காராமணி – 250 கிராம்
கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்

செய்முறை :

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் பாதியளவு கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும்.

* இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

* சுவையான சத்தான காராமணி – கேரட் சுண்டல் ரெடி.201610071250556289 Navratri Special cowpea carrots sundal SECVPF

Related posts

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

சிக்கன் ரசம்

nathan

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

nathan

கத்திரி வாழைப்பூ தொக்கு

nathan

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

nathan

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு

nathan