201610011049368422 Navratri Special sago sundal SECVPF
​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும்.

* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!201610011049368422 Navratri Special sago sundal SECVPF

Related posts

சூப்பரான பட்டர் பிஸ்கட்

nathan

கத்திரி வாழைப்பூ தொக்கு

nathan

ஓட்ஸ் கீர்

nathan

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

மட்டன் ரசம்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச்

nathan

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

nathan

சூப்பரான பூசணிக்காய் கறி

nathan