பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் கடனற்ற வாழ்க்கையை வாழ விரும்புவான்.
நிதி சிக்கல்கள் ஏற்படும்போது, அவர்களின் வாழ்க்கையில் மன அமைதி தொலைந்து போகிறது என்று மக்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். யாரிடமும் பணத்தை எதிர்பார்க்காமல், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் விருப்பப்படி செலவழித்து, நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ முடிவது மகிழ்ச்சியான விஷயம்.
உண்மையில், இன்று பலருக்கு அது சாத்தியமில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஜோதிடம் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை அதிகரிக்க, புதனும் குருவும் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அதேபோல், ஒரு நபரின் பிறப்பு ராசி மற்றும் ராசியும் அவரது நிதி நிலைமையைப் பாதிக்கிறது.
அந்த வகையில், சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சனைகளால் சிரமங்களை அனுபவிப்பார்கள். அடுத்த பதிவில் இவர்கள் யார் என்று பார்ப்போம்.
மூலம் | மூலம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 19-வது நட்சத்திரமாகும். மற்ற நட்சத்திரங்கள் போல் அல்லாமல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். எப்படியான பிரச்சினைகளையும் தனியாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாக சிந்திப்பார்கள். எதையும் ஆர்வமாக எதிர்க் கொள்ளும் நபராக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் வரும் பணக்கஷ்டங்களை அவர்களையே சரிச் செய்து கொள்வார்கள். |
பூராடம் | 27 நட்சத்திரங்களில் 20-வது நட்சத்திரமாக பூராடம் உள்ளது. பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகு மற்றும் கவர்ச்சிக்கு பெயர் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விசுவாசமானவர்களாக இருப்பதால் பணம் விடயத்தில் பல இன்னல்களுக்கு முகங் கொடுப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் உண்மைத்தன்மை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். நம்பிக்கையுடன் முயற்சிப்பது அவசியம். |
உத்திராடம் | உத்திராடம் நட்சத்திரம் மகர ராசிக்காரர்களுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் இவர்களிடம் மற்றவர்களும் அன்புடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் பயணம் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். குடும்ப உறவுகள் மீது பாசம் மற்றும் கவனிப்புடன் இருப்பார்கள். இதனால் அதிகமான செலவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் வாழ்க்கை வாழ்வார்கள். |