30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
New Project 88
Other News

மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

உத்தரபிரதேச மாநிலம் ராய் பாலியை சேர்ந்தவர் அருண்குமார் சிங் (45). அவர் 2017 முதல் உள்ளூர் மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவருக்கு 40 வயதுடைய மனைவியும், 12 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குடும்பத்தினர் யாரும் வெளியே வரவில்லை. இதற்கிடையில், அவரை மருத்துவமனையில் இருந்து அழைத்த சக மருத்துவர்கள், அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையை தொடங்கியபோது, ​​அருணின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​டாக்டர் உட்பட 4 பேர் இறந்து கிடந்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மனமுடைந்த மருத்துவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related posts

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்..! சூர்யாவை இப்படித்தான் உயரமாகக் காட்டினோம்

nathan

கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி..

nathan

அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா

nathan

இந்த மாதம் பிறந்தவங்க கடின உழைப்பால் உச்சத்திற்கு வருவார்களாம்..

nathan

இந்த ராசிக்காரர்கள் உங்கள காதலிச்சா நீங்க ரொம்ப சந்தோஷப்படணுமாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

காதலனின் பிறந்தநாளுக்கு அழகிய போட்டோக்களுக்கு வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்

nathan

சைலண்டா நடந்து முடிஞ்ச சஞ்சய் பட பூஜை

nathan

என் குடும்பத்தை பத்தி பேசாத… அலறவிட்ட ஜோவிகா..

nathan