31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

கவின் திருமணம் குறித்து லாஸ்லியா போட்ட பதிவு..

nathan

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.!

nathan

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பரபரப்பு பேட்டி – என் மீது செருப்பை கழற்றி வீசினார்

nathan

கால் இழந்தபோதும் மனம் தளராத கால்பந்து விளையாட்டு சாதனையாளர்!

nathan

காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு…

nathan

உக்ரேனிய மருத்துவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை !ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம்?

nathan

2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

nathan

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விவசாயி மகள்!இதுவரை வெல்லாத பிரிவில் பதக்கம்!

nathan