30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் -புகைப்படங்கள்

nathan

காருக்குள் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்..! – புலம்பும் ரசிகர்கள்..!

nathan

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம்

nathan

தளபதி 67 படத்தில் இணைத்த லோகேஷ்.! லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan

கனடா அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி: இன்றுடன் முடிவுக்கு வரும் விதிகள்

nathan

இர்பான் வெளியிட்ட திடீர் போஸ்ட்! வீட்ல விசேஷம்..

nathan

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி 2025:ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?

nathan

கொட்டும் மழையில் குட்டியை காப்பாற்ற ஓடிய தாய் நாய்!

nathan

இளையராஜாவை சீண்டிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் எச்சரிக்கை

nathan