30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அனநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). சொந்தமாக கார் வைத்திருந்த இவர், வாடகை காரில் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் நவ்யா (36), திருநங்கை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயக்கவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

இவருக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யா வீட்டிற்கு சென்று மகிழ்ந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வாழப்பாடி-பட்டப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் விதிககாரசன் (34) ஆகியோர் போதையில் நவ்யா வீட்டிற்கு சென்று நவ்யாவை தேடினர்.

 

பின்னர், அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா,

 

தடியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பன்னீர் பட்டர் மசாலா

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

nathan

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு இதுதான் காரணமா? 16 வயதில் முதல் காதல்!

nathan

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு

nathan

ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் வாழ்ந்ததே பெருசு

nathan

இனியும் அலட்சியம் காட்டாதீர்கள்! பெண்கள் கருத்தரிப்பதற்கு தாமதமாவது ஏன் தெரியுமா?..

nathan

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

nathan

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

nathan

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan