29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

சுவாச நோய்க்கான சித்த மருந்துகள்

1 . மகாவில்வாதி லேகியம்
வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்
விலாமிச்சை
நிலவாகை
பாதிரி
நன்னாரி
பருவிளா
சிற்றாமல்லி
பேராமல்லி
சிறுவிளாவேர்
சிறுவாகை
முன்னை
முசுமுசுக்கை
கொடிவலி
தேற்றான் விரை

போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு
உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு
இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர்
சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து
பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

சுக்கு
மிளகு
திப்பிலி
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
லவங்கம்
ஏலம்
கோஷ்டம்
அதிமதுரம்
கெந்தமாஞ்சில்
கருஞ்சீரகம்
வெண்சீரகம்
வாய்விலங்கம்
சகஸ்திரபேதி
தாளிசபத்திரி
செண்பகப்பூ
அக்கிரகாரம்
மல்லி
விளா
கார்போக அரிசி
தேக்கு
முந்திரி
பேரீச்சம்
வில்வம்
வாளுவையரிசி
சிறுநாகம்
நாகணம்
பருத்திவிரை
வேப்பன்விரை
இர்லுப்பைப்பூ.

போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி
தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக
கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

தீரும் நோய்கள்.
சுவாசகாசம்
அரோசகம்
வீக்கம்
உடம்பு எரிவு
விஷப்பாண்டு
வயிற்றெரிச்சல்
உப்பசம்
கிராணி
எரிபாண்டு
கைகாலெரிவு
காந்தல்
வாந்தி
ஓக்காளம்
அன்னதோஷம்
சூலை
எட்டு வகையான சயங்கள்
அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
நாற்பது வகையான பித்தங்கள்
அஸ்திசுரம்
அதிசாரம் முதலியன தீரும்.

Related posts

எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?

nathan

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா?இதோ எளிய நிவாரணம்

nathan

உங்களுக்கு தூக்கத்தில் கை மரத்துப் போகிறதா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களை அவதிக்குள்ளாக்கும் எலும்பு தேய்மானம்

nathan

தெரிஞ்சிக்கங்க… இந்த உணவுகள் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் எனத் தெரியுமா?

nathan

கர்ப்பிணிகளுக்குப் எளிய சித்த மருந்துகள்

nathan

சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்!

nathan