30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

நாள் முழுவதும் நல்ல பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஹீமோகுளோபின் குறைவு தான்.

உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை, உடல் களைப்பு அடைகிறது, இதனால் களைப்பு நீங்கி பலம் கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். களைப்பு நீங்கும், தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

முருங்கை

முருங்கையை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும்.

உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.

அருகம்புல்

அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.

வேப்பம்பூ

வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலவீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலவீனங்களும் சரியாகிவிடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி

nathan

வறுத்து அரைச்ச முட்டை குழம்பு -கேரளா ஸ்டைல்

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் அதிசய சூப்…!

nathan

சுவையான மட்டன் கீமா கட்லெட்

nathan

பி.பி, சுகர்னு அத்தனையையும் விரட்டி “குட்பை“ சொல்லும் அதிசய பழம்!

nathan

இதை தினமும் சாப்பிடுங்க : கொலஸ்ட்ராலுக்கு சொல்லலாம் குட்பாய்…!

nathan

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

nathan