inner
சமையல் குறிப்புகள்

சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு – ஒன்று,

இட்லி அரிசி – 200 கிராம்,
துவரம்பருப்பு – 100 கிராம்,
கடலைப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்),
பூண்டுப் பல் – 2,
மிளகு – 10,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 100 மில்லி.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

ஊறவைத்த அரிசியைக் களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்துத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த பருப்பையும் சேர்த்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தோலுரித்த பூண்டுப் பல் போட்டு, மிளகு, உப்பு சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவை தோசைக்கல்லில் பரவலாக மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan

சுவையான சேப்பங்கிழங்கு டிக்கி வீட்டிலேயே செய்யலாம்…..

sangika

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு முட்டை மசாலா

nathan

சுவையான கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான தயிர் பூரி

nathan