31.5 C
Chennai
Sunday, Jun 16, 2024
7 pickle2
ஆரோக்கியம் குறிப்புகள்

ஊறுகாய் இல்லாம சாப்பாடு இறங்காதா உங்களுக்கு..? உங்களுக்குதான் இந்த விஷயம்!

இந்தியாவில் ஊறுகாய் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். அத்தகைய ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். சிலருக்கு சாப்பிடும் போது ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. அந்த அளவில் ஊறுகாயானது அதன் சுவையால் பலரை அடிமையாக்கி வைத்துள்ளது.

 

ஊறுகாயில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் இந்த உணவுப் பொருள் தான் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தும் பொருட்கள் தான். என்ன தான் ஊறுகாயை தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொல்லும்.

இப்போது ஊறுகாயை அன்றாடம் எடுத்து வந்தால், என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீரிழிவு

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமைக்கு உள்ளாகக்கூடும்.

இதய நோய்

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்சனைகள்

ஊறுகாய் சாப்பிடுவது கெட்டதா? ஆம். ஏனெனில் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

வயிற்று உப்புசம்

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

உயர் இரத்த அழுத்தம்

அதிக அளவில் உப்பு எடுத்தால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, அதனால் இதய நோய் வருவதையும் தவிர்க்கலாம்.

அல்சர்

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

என்ன தான் ஊறுகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும், இவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அதற்காக ஊறுகாயை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

Related posts

தயங்க வேண்டாம் பெண்களே! உரக்கச் சொல்லுங்கள்!..உள்ளாடையின் முக்கியத்துவத்தை

nathan

தெரிஞ்சிக்கங்க… கொடூர குணம் கொண்ட மிகவும் ஆபத்தான நாய் இனங்கள்!!!

nathan

நல்ல தூக்கத்தைப் பெற சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் மருத்துவ பயன்கள் ??

nathan

சாதாரண சோப்பும், ஆன்டி பாக்டீரியா சோப்பும் ஒரே மாதிரியான விளைவுகளை தரவல்லது தான்!!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கலாம் தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்…

nathan

அதிர்ச்சி சம்பவம் பாவாடை கட்டினால் புற்று நோயா.? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!

nathan

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

நைட்ல இந்த உணவுகள சாப்பிடாதீங்க! குறட்டை உங்கள் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்காமல் இருக்கணுமா?

nathan