Other News

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கரும்பை பிடிக்காதவர் யாருக்கும் இருக்க மாட்டார்கள். அனைவருக்குமே கரும்புச் சாறு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஏனெனில் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதனால் உடலுக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாது.

கரும்பு சாறு குடிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு எவ்வளவு பயன்படும் என்று பார்ப்போம்

  • அதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும் இதற்கு தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கலாம்.
  • அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச் சாற்றை குடிக்கலாம்.
  • எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு சேர்த்து குடிப்பதனால் இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் அதிகளவில் கிடைத்து விடும்.
  • அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்சி தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது மிகவும் ஆரோக்கியம் தரும்.
  • கரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு குடிக்கலாம்.

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

  • கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது சிறந்தது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது மிகவும் சிறந்தது.
  • கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம் என கூறப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button